thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalமடி இன்மைMatiyinmai
குறள் 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.

Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku

Atimai Pukuththi Vitum

If sloth invades a noble house It will become a slave of foes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

SP (சாலமன் பாப்பையா)

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

MK (மு.கருணாநிதி)

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

Couplet

If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be

Explanation

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies