thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஊக்கம் உடைமைOokkamutaimai
குறள் 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

஦வ்ருஉம் புலிதாக் குறின்.

Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai

Veruum Pulidhaak Kurin

Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

SP (சாலமன் பாப்பையா)

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

MK (மு.கருணாநிதி)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்

Couplet

Huge bulk of elephant with pointed tusk all armed,When tiger threatens shrinks away alarmed

Explanation

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger