thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalவாழ்க்கைத் துணைநலம்Vaazhkkaith Thunainalam
குறள் 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

Petraar Perinperuvar Pentir Perunjirappup

Puththelir Vaazhum Ulaku

Women who win their husbands' heart Shall flourish where the gods resort

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

MK (மு.கருணாநிதி)

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்

Couplet

If wife be wholly true to him who gained her as his bride,Great glory gains she in the world where gods bliss abide

Explanation

If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish