thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalவாழ்க்கைத் துணைநலம்Vaazhkkaith Thunainalam
குறள் 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

Siraikaakkum Kaappevan Seyyum Makalir

Niraikaakkum Kaappe Thalai

Of what avail are watch and ward? Their purity is women's guard

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

SP (சாலமன் பாப்பையா)

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

MK (மு.கருணாநிதி)

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

Couplet

Of what avail is watch and ward?Honour's woman's safest guard

Explanation

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity