பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகண்ணோட்டம்Kannottam
குறள் 578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku
Urimai Utaiththiv Vulaku
Who gracious are but dutiful Have right for this earth beautiful
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
SP (சாலமன் பாப்பையா)
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
MK (மு.கருணாநிதி)
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்
Couplet
Who can benignant smile, yet leave no work undone;By them as very own may all the earth be won
Explanation
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)