thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam

Peeykan Tannadhu Utaiththu

Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

SP (சாலமன் பாப்பையா)

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

MK (மு.கருணாநிதி)

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்

Couplet

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance

Explanation

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil