thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 564

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan

Uraikatuki Ollaik Ketum

As men the king a tyrant call His days dwindled, hasten his fall

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

SP (சாலமன் பாப்பையா)

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

MK (மு.கருணாநிதி)

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்

Couplet

'Ah! cruel is our king', where subjects sadly say,His age shall dwindle, swift his joy of life decay

Explanation

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened