thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 562

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

Katidhochchi Mella Erika Netidhaakkam

Neengaamai Ventu Pavar

Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

MK (மு.கருணாநிதி)

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்

Couplet

For length of days with still increasing joys on Heav'n who call,Should raise the rod with brow severe, but let it gently fall

Explanation

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness