thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

Thakkaangu Naatith Thalaichchellaa Vannaththaal

Oththaangu Oruppadhu Vendhu

A king enquires and gives sentence Just to prevent future offence

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

SP (சாலமன் பாப்பையா)

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

MK (மு.கருணாநிதி)

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்

Couplet

Who punishes, investigation made in due degree,So as to stay advance of crime, a king is he

Explanation

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed