thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalவாழ்க்கைத் துணைநலம்Vaazhkkaith Thunainalam
குறள் 55

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal

Peyyenap Peyyum Mazhai

Her spouse before God who adores, Is like rain that at request pours

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

SP (சாலமன் பாப்பையா)

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

MK (மு.கருணாநிதி)

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

Couplet

No God adoring, low she bends before her lord;Then rising, serves: the rain falls instant at her word

Explanation

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain