thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu

Eppaalnoo Lorkkum Thunivu

Forgetful nature fails of fame All schools of thinkers say the same

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

SP (சாலமன் பாப்பையா)

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

MK (மு.கருணாநிதி)

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்

Couplet

'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school

Explanation

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world