பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu
Negligence kills renown just as Ceaseless want wisdom destroys
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
SP (சாலமன் பாப்பையா)
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.
MK (மு.கருணாநிதி)
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்
Couplet
Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies
Explanation
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge