thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇல்வாழ்க்கைIlvaazhkkai
குறள் 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu�ryum

Theyvaththul Vaikkap Patum

He is a man of divine worth Who lives in ideal home on earth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

SP (சாலமன் பாப்பையா)

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

MK (மு.கருணாநிதி)

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

Couplet

Who shares domestic life, by household virtues graced,Shall, mid the Gods, in heaven who dwell, be placed

Explanation

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven