thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇல்வாழ்க்கைIlvaazhkkai
குறள் 49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

Aran Enap Pattadhe Ilvaazhkkai

Aqdhum Piranpazhippa Thillaayin Nandru

Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

MK (மு.கருணாநிதி)

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்

Couplet

The life domestic rightly bears true virtue's name;That other too, if blameless found, due praise may claim

Explanation

The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it