thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடனறிதல்Itanaridhal
குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

Thotangarka Evvinaiyum Ellarka Mutrum

Itanganta Pinal Ladhu

No action take, no foe despise Until you have surveyed the place

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

SP (சாலமன் பாப்பையா)

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

MK (மு.கருணாநிதி)

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்

Couplet

Begin no work of war, depise no foe,Till place where you can wholly circumvent you know

Explanation

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him