thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசிற்றினம் சேராமைSitrinanjeraamai
குறள் 454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

Manaththu Ladhupolak Kaatti Oruvarku

Inaththula Thaakum Arivu

Wisdom seems to come from mind But it truly flows from the kind

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

MK (மு.கருணாநிதி)

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்

Couplet

Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find

Explanation

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions