thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசிற்றினம் சேராமைSitrinanjeraamai
குறள் 453

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam

Innaan Enappatunj Chol

Wisdom depends upon the mind The worth of man upon his friend

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

SP (சாலமன் பாப்பையா)

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

MK (மு.கருணாநிதி)

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்

Couplet

Perceptions manifold in men are of the mind alone;The value of the man by his companionship is known

Explanation

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates