thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch

Aarpilaark Killai Nilai

No capital, no gain in trade No prop secure sans good comrade

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்

Couplet

Who owns no principal, can have no gain of usury;Who lacks support of friends, knows no stability

Explanation

There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to