thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 443

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

Ariyavatru Lellaam Aridhe Periyaaraip

Penith Thamaraak Kolal

Honour and have the great your own Is rarest of the rare things known

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

MK (மு.கருணாநிதி)

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

Couplet

To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known

Explanation

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things