thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

Utranoi Neekki Uraaamai Murkaakkum

Petriyaarp Penik Kolal

Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

MK (மு.கருணாநிதி)

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்

Couplet

Cherish the all-accomplished men as friends,Whose skill the present ill removes, from coming ill defends

Explanation

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen