செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum
That miser's wealth shall waste and end Who would not for a good cause spend
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
SP (சாலமன் பாப்பையா)
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
MK (மு.கருணாநிதி)
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்
Couplet
Who leaves undone what should be done, with niggard mind,His wealth shall perish, leaving not a wrack behind
Explanation
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue