தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?
What fault can be the king's who cures First his faults, then scans others
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
SP (சாலமன் பாப்பையா)
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
MK (மு.கருணாநிதி)
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
Couplet
Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men
Explanation
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others