thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகுற்றங்கடிதல்Kutrangatidhal
குறள் 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

Kutrame Kaakka Porulaakak Kutrame

Atran Tharooum Pakai

Watch like treasure freedom from fault Our fatal foe is that default

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

Couplet

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

Explanation

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy