தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar
Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
SP (சாலமன் பாப்பையா)
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
MK (மு.கருணாநிதி)
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்
Couplet
Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem
Explanation
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree