thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகேள்விKelvi
குறள் 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal

Aviyinum Vaazhinum En?

Who taste by mouth and not by ear What if they fare ill or well here?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

SP (சாலமன் பாப்பையா)

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

MK (மு.கருணாநிதி)

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்

Couplet

His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live

Explanation

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?