thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்லாமைKallaamai
குறள் 404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum

Kollaar Arivutai Yaar

The unread's wit though excellent Is not valued by the savant

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

MK (மு.கருணாநிதி)

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

Couplet

From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show

Explanation

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge