பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்லாமைKallaamai
குறள் 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin
Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
SP (சாலமன் பாப்பையா)
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
MK (மு.கருணாநிதி)
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
Couplet
The blockheads, too, may men of worth appear,If they can keep from speaking where the learned hear
Explanation
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned