thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan

Saandhunaiyung Kallaadha Vaaru

All lands and towns are learner's own Why not till death learning go on!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

SP (சாலமன் பாப்பையா)

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

MK (மு.கருணாநிதி)

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

Couplet

The learned make each land their own, in every city find a home;Who, till they die; learn nought, along what weary ways they roam

Explanation

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?