thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk

Katranaith Thoorum Arivu

As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

SP (சாலமன் பாப்பையா)

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

MK (மு.கருணாநிதி)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்

Couplet

In sandy soil, when deep you delve, you reach the springs below;The more you learn, the freer streams of wisdom flow

Explanation

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning