பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇறைமாட்சிIraimaatchi
குறள் 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku
Iraiyendru Vaikkap Patum
He is the Lord of men who does Sound justice and saves his race
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
SP (சாலமன் பாப்பையா)
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
MK (மு.கருணாநிதி)
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்
Couplet
Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns
Explanation
That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).