thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇறைமாட்சிIraimaatchi
குறள் 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku

Iraiyendru Vaikkap Patum

He is the Lord of men who does Sound justice and saves his race

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

SP (சாலமன் பாப்பையா)

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

MK (மு.கருணாநிதி)

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்

Couplet

Who guards the realm and justice strict maintains,That king as god o'er subject people reigns

Explanation

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).