thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇறைமாட்சிIraimaatchi
குறள் 387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.

Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal

Thaankan Tanaiththiv Vulaku

The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

MK (மு.கருணாநிதி)

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்

Couplet

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,He sees the world obedient all to his command

Explanation

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him