thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஅவா அறுத்தல்Avaavaruththal
குறள் 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

Inpam Itaiyaraa Theentum Avaavennum

Thunpaththul Thunpang Ketin

Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

SP (சாலமன் பாப்பையா)

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

MK (மு.கருணாநிதி)

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

Couplet

When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows

Explanation

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed