thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu

Pondrungaal Pondraath Thunai

Do good enow; defer it not A deathless aid in death if sought

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

MK (மு.கருணாநிதி)

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

Couplet

Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise';Thus, when thou diest, shalt thou find a help that never dies

Explanation

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend