அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram
Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
SP (சாலமன் பாப்பையா)
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
MK (மு.கருணாநிதி)
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்
Couplet
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,Lust, evil speech-these four, man onwards moves in ordered path
Explanation
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech