thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalமெய்யுணர்தல்Meyyunardhal
குறள் 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

Pirappennum Pedhaimai Neengach Chirappennum

Semporul Kaanpadhu Arivu

It is knowledge to know Self-Truth And remove the folly of birth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

SP (சாலமன் பாப்பையா)

பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

MK (மு.கருணாநிதி)

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்

Couplet

When folly, cause of births, departs; and soul can viewThe truth of things, man's dignity- 'tis wisdom true

Explanation

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven