ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu
One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
SP (சாலமன் பாப்பையா)
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.
MK (மு.கருணாநிதி)
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்
Couplet
The mind that knows with certitude what is, and ponders well,Its thoughts on birth again to other life need not to dwell
Explanation
Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being