thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalமெய்யுணர்தல்Meyyunardhal
குறள் 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

Irulneengi Inpam Payakkum Marulneengi

Maasaru Kaatchi Yavarkku

Men of spotless pure insight Enjoy delight devoid of night

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

MK (மு.கருணாநிதி)

மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்

Couplet

Darkness departs, and rapture springs to men who see,The mystic vision pure, from all delusion free

Explanation

A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)