அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalமெய்யுணர்தல்Meyyunardhal
குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu
That error entails ignoble birth Which deems vain things as things of worth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
SP (சாலமன் பாப்பையா)
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
MK (மு.கருணாநிதி)
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது
Couplet
Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream
Explanation
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real