thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஇன்னா செய்யாமைInnaaseyyaamai
குறள் 314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

Innaasey Thaarai Oruththal Avarnaana

Nannayanj Cheydhu Vital

Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

SP (சாலமன் பாப்பையா)

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

MK (மு.கருணாநிதி)

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்

Couplet

To punish wrong, with kindly benefits the doers ply;Thus shame their souls; but pass the ill unheeded by

Explanation

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides