thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஇன்னா செய்யாமைInnaaseyyaamai
குறள் 313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin

Uyyaa Vizhuman Tharum

Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

MK (மு.கருணாநிதி)

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்

Couplet

Though unprovoked thy soul malicious foes should sting,Retaliation wrought inevitable woes will bring

Explanation

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow