thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஇன்னா செய்யாமைInnaaseyyaamai
குறள் 311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

Sirappeenum Selvam Perinum Pirarkku

Innaa Seyyaamai Maasatraar Kol

The pure by faith mean pain to none Though princely wealth by that is won

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

SP (சாலமன் பாப்பையா)

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

MK (மு.கருணாநிதி)

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

Couplet

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,No ill to do is fixed decree of men in spirit pure

Explanation

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness