அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin
Wishes he gains as he wishes If man refrains from rage vicious!
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
SP (சாலமன் பாப்பையா)
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
MK (மு.கருணாநிதி)
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்
Couplet
If man his soul preserve from wrathful fires,He gains with that whate'er his soul desires
Explanation
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of