thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

Ullaththaal Ullalum Theedhe Piranporulaik

Kallaththaal Kalvem Enal

\"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.

MK (மு.கருணாநிதி)

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்

Couplet

'Tis sin if in the mind man but thought conceive;'By fraud I will my neighbour of his wealth bereave.'

Explanation

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another