thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum

Kallaamai Kaakkadhan Nenju

Let him who would reproachless be From all frauds guard his conscience free

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

MK (மு.கருணாநிதி)

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்

Couplet

Who seeks heaven's joys, from impious levity secure,Let him from every fraud preserve his spirit pure

Explanation

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing