thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalதவம்Thavam
குறள் 270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

Ilarpala Raakiya Kaaranam Norpaar

Silarpalar Nolaa Thavar

Many are poor and few are rich For they care not for penance much

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

MK (மு.கருணாநிதி)

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்

Couplet

The many all things lack! The cause is plain,The 'penitents' are few The many shun such pain

Explanation

Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world