thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalபுலால் மறுத்தல்Pulaanmaruththal
குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.

Unnaamai Ventum Pulaaal Piridhondran

Punnadhu Unarvaarp Perin

From eating flesh men must abstain If they but feel the being's pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

SP (சாலமன் பாப்பையா)

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

MK (மு.கருணாநிதி)

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்

Couplet

With other beings' ulcerous wounds their hunger they appease;If this they felt, desire to eat must surely cease

Explanation

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it