மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa
Thannuyir Anjum Vinai
His soul is free from dread of sins Whose mercy serveth all beings
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
SP (சாலமன் பாப்பையா)
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
MK (மு.கருணாநிதி)
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்
Couplet
Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel
Explanation
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)