அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalஅருளுடைமைArulutaimai
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
Arulserndha Nenjinaark Killai Irulserndha
Innaa Ulakam Pukal
The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
SP (சாலமன் பாப்பையா)
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
MK (மு.கருணாநிதி)
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்
Couplet
They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides
Explanation
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness