நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
SP (சாலமன் பாப்பையா)
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
MK (மு.கருணாநிதி)
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது
Couplet
If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned
Explanation
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world