thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுகழ்Pukazh
குறள் 233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.

Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal

Pondraadhu Nirpadhon Ril

Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

MK (மு.கருணாநிதி)

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை

Couplet

Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die

Explanation

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness